Wednesday, February 27, 2008

பி . சுசிலா


பி . சுசிலா


இசை உலகில் இன்பம் தரும் குயிலின் குரல் கொண்ட தமிழ் நெஞ்சங்களை இசையில் வாழவைத்துக்கொண்டிருக்கும்

எங்கள் வற்றாத இன்ப ஊற்று பி . சுசிலா அவர்கள்.


அவரின் குரலை கேட்டாலே நம்மை மறந்தே விடுவோம்
திரை உலகில் ஒரு கலக்கு கலக்கி மக்களை தம் வசமாக்கிய குரல் கொண்டாவர் பி .சுசிலா அவர்களே.


எத்தனை சந்ததிகள் வந்தாலும் அவர் பாடிய பாடல்களை ரசிக்கும் அளவிற்கு பாடியுள்ளார்.

என்ன ஒரு வரம் இதுதான் கடவுள் தந்த வரம் அவர் முகத்தை பார்த்தாலே நாம் சுகமாக தூங்கிட முடியும் போது அவர் பாடினா தூக்கத்தில் சொர்க்கம் செல்லுமுடியும் எந்த மொழிக்கும் குரல் இசைந்து கொடுக்கும் தன்மை கொண்டவர்.

அவர் பாடிய எத்தனை பாடல்கள் நம்மை இன்பத்தில் கொண்டு சென்றன.
கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ.. என்ற பாடல் கேட்கும் போது அவரின் குரல் நெஞ்சை வருக் கொண்டது.


வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ என்ற பாடல் நாணத்தை தொட்டுச்சென்றன.


இப்படி ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நிலை தந்து மகிழவைத்த அரசி பி. சுசிலா அவர்கள்.


இசையின் உயிராய்

அவரின்ரசிகையாய்

வாழும்இவள்


ராகினி

ஜேர்மனி.