Friday, January 25, 2008

பாடகி எஸ் ஜானகியின் பதிவு





பாடகி எஸ் ஜானகியின் பதிவு


எந்த ஒரு பாடலாக இருந்தாலும் தன் குரலை வைத்தே அசத்தக்கூடிய வரம் பெற்ற தாய் எஸ் ஜானகி அவர்கள் குழந்தையாக குரலிலும்மனதாலும் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின் றார் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் எனி வரும் சந்ததிகளை கூட தன் வசமாக்கி கொள்ளும் குரல் வல்லமை கொண்டவர் எழுதப்படும் கவிதைகளுக்கு
உணர் வூட்டமாக பாடி மக்களை வசியப்படுத்தும் தன்மை உடையவர் அவர்.

பாடும் ஒவ்வொரு பாடலும் நம்மை அப்படியே அமர்திடச்செய்கின் றது அவரின் குரல்பாடும் போது எந்த அசைவுகளும் கொடுக்காது தன் உடலை அமைதி படுத்தி குரலை வெளிக்காட்டும் அதி சக்தி வாய்ந்த வல்லமை கொண்டவர் ஜானகி அவர்கள் அவரது பாடல் கள் எல்லாமே உரிர் பெற்ற பாடல்கள். அவரது இசைப்பயணம் என்றும் வாழ வேண்டும் காலகாலமாய்.

அவர் பாடிய பாடலில் சிங்கார வேலனே தேவா.. என்ற பாடல் பாடும் போது அவரது கம்பீரமாண குரலை அப்படியே எனக்குள் சுவாசித்து பசி மறந்தேன்.அவருக்கு வயது தான் போனதே தவிர அவரது குரல் என்றும் இளமைக்காலத்தில் ஊஞ்சல் ஆடிக்கொண்டே உள்ளது இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்லனும் அவரது குரலைபோல் மனதும் குழந்தை வடிவமாய் முகத்தில் புன்னகை சிந்தியபடி அவர் பாடும் அழகை ரசிக்க நாம் எடுத்த வரம் இந்த மானிடப்பிறவி என்ற போது மனதில் உருவாகிக்கொள்கின்றது என்னை அறியாத மகிழ்ச்சிப் பரவசம். எனக்குள் வந்து செல்கின்றது.

No comments: